விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - ரிஷபம்

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - ரிஷபம்

இலக்கையும், உறுதி தன்மையும் கொண்டு விளங்கும் ரிஷப ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குரு அமர்வதும் தொழில் ஸ்தானத்தில் ராகு சனியுடன் இணைவதும் செய்யும் தொழிலில் வெளிநாட்டு வாய்ப்புகளை பெறுவீர்கள். எதையும் முன்கூட்டியே முடிவு செய்து அதில் வெற்றி காண்பீர்கள்.
 
இந்த ஆண்டு துவக்கத்தில் 26-04-2025 முதல் ராகு தொழில் ஸ்தானத்தில் அமர்வது உங்களின் தொழில் ஸ்தானம் பலம் பெற்று யோகாதிபதி சனியுடன் இணைவு பெறுவதால் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் மூலம் நல்ல வருமானம் பெறும் வாய்ப்பைப் பெறுவீர்கள். ஓன்லைன் வர்த்தகத்தின் ஆர்வம் கொண்டு செயல்படுவீர்கள். பயிற்சிகளை எடுத்து கொண்டு நேரடி விற்பனை நிறுவன பொருட்கள் விற்பனையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
 
குரு வரும் 11-05-2025 முதல் தனஸ்தானத்தில் அமர்வது பொருளாதாரத்தில் வளர்ச்சியை பெறும் வாய்ப்புகள் அமையும். தங்க நகை வாங்குதல் இரும்பு சம்மந்தமான பொருட்கள் மூலம் நல்ல வருமானம் பெறுதல். வியாபாரத்தில் முன்னேற்றம் காணுதல் போன்ற வளர்ச்சிகளை பெறுவீர்கள். தங்கம் வாங்கும் வாய்ப்பு சிலருக்கு அமையும். நினைத்ததை நினைத்தபடி உருவாக்கி கொள்ளும் திறமைகள் உண்டாகும். பூர்வ புண்ணியஸ்தானத்தில் கேது அமர்வது நல்லதல்ல. இதனால் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் தடைபடும். கொடுக்க வேண்டிய இடத்தில் தாமதமாக வந்து சேரும். எதிலும் சுயமுயற்சி நல்ல பலனைப் பெற்று தரும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:  
 
வெள்ளி, சனி, வியாழன்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: 
 
வெண்மை, மஞ்சள், நீலம்.
 
அதிர்ஷ்ட எண்கள்: 
 
3, 6, 9.
 
பரிகாரங்கள்:
 
ஒவ்வொரு வெள்ளிகிழமையும் மகாலெட்சுமி வழிபாடு செய்து நெய் தீபம் ஏற்று வணங்கி வருவதும் மாதம் ஒரு முறை 10 சுமங்கலிகளுக்கு மஞ்சள் கிழங்கு தாலி வாங்கி கொடுத்துவர சகல தடைகளும் நீங்கும்.