பாம்பன் சுவாமிக்கு முருகப்பெருமான் காட்சி!

பாம்பன் சுவாமிக்கு முருகப்பெருமான் காட்சி!

ஐக்கி ஸ்பிரிச்சுவல் நேயர்களுக்கு வணக்கம். இந்த வாரம் சித்தர் கோவில் வரிசையில் பாமபன் சுவாமிகள் பற்றி தெரிஞ்சுக்குவோம் வாங்க...
 
பாம்பன் சுவாமிகள் என்று சொல்லும்பொது, திருவான்மையூர் தான் எல்லாருக்கும் நியாபகம் வரும். ஒரு சிலருக்கு மட்டுமே இந்த இடம் தெரியும். அவர் தவம் புரிந்த இடம் என்பதால், இந்த இடத்திற்கு வந்த வணங்கி தியானம் பண்ணும்போது அவரின் பூரண அருள் கிடைக்கும்.
 
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றிய பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாச சுவாமிகள், தென்னகத்தில் முருகப்பெருமானின் வழிபாட்டை தீவிரவாக்கிய மகான். இவரின் கோவில்  இராமேஸ்வரம் அருகே உள்ள பிரப்பன்வலசையில் அமைந்துள்ளது. தனது நாற்பத்தி ஆறாவது வயதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரப்பன்வலசை என்னும் ஊரினை தவம் புரிய தேர்வு செய்து அவ்வூரில் உள்ள மயான பூமியில் ஒரு குழி அமைக்க செய்தார்,பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாச சுவாமிகள்.
 
"குமரவேலை தரிசித்தால் அன்றி இனி வாழும் இவ்வுடல் கொண்டு மீளேன்" என்று சூளுரைத்து தவத்தை தொடங்கினார். ஆறு நாட்கள் பழனி முருகப்பெருமானை உள்ளத்தில் நிறுத்தி கடும் தவம் புரிந்த இவருக்கு ஏழாவது நாளில் தண்டாயுதபாணியின் தரிசனத்தையும் ஓர் எழுத்து உபதேசத்தையும் அருளினார் முருகப்பெருமாள். முருகப்பெருமானுடன் அகத்தியரையும் அருணகிரிநாதரையும் கண்டு தரிசித்தார் பாம்பன் சுவாமிகள்.
 
அதன்பின்பு பாம்பன் சுவாமி, ஆறாயிரத்து அறநூற்று அறுபத்தி ஆறு பாடல்களையும் முத்திரண்டு  வியாசகங்களையும் எழுதி முருகப்பெருமானை கொண்டாடினார்.
 
பாம்பன் சுவாமி, தமிழகம் மட்டும் இன்றி வெஜுவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜெகன்நாதம், கொல்கத்தா, கயா என்று காசி வரை திருத்தல யாத்திரை மேற்கொண்ட நிலையில் ஆயிரத்து தொள்ளாயிரத்து பதினெட்டாம் ஆண்டு வெப்பநோய்  பாதிப்பு ஏற்பட்டது. அந்நேரம் குமாரஸ்தவம் எனும் ஆறு எழுத்து மந்திர நூலை இயற்றினார். அந்த பாடலால் பூரண குணமும் பெற்றார்.
 
"ஓம் சண்முக பதையே நமோ நம" என தொடங்கும் இந்த மந்திர பாடல்களை பாடுபவர்கள்  சண்முக பெருமாள் இரு தேவியர்களோடு அமர்ந்த காட்சியை தரிசிப்பார்கள் என சுவாமிகள் தமது சீடர்களுக்கு உபதேசித்தார்.
 
ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தொன்பதாம் ஆண்டு மே முப்பதாம் தேதி காலை ஏழு பதினைந்துக்கு பாம்பன் சுவாமிகள் மகா சமாதி அடைந்தார். 
 
அடுத்த நாள் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப விவாதத்தில் பாம்பன் சுவாமிகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அவர் விதித்த படி வங்க கடலோரம் சென்னை திருவான்மையூரில் ஸ்வாமிகளின் திரு உடல் அடக்கம் செய்யப்பட்டு மகா சமாதியும் அமைக்கப்பட்டது.
 
உங்களுக்கு பிடித்த சித்த்த்தார் கோவில்களை பிரபலப்படுத்த எங்கள் சேனலை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி வணக்கம்!