நவம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - துலாம்

நவம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - துலாம்

எதற்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் துலாம் ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் விரையஸ்தானத்தில் மறைந்து நீசம் பெறுவதும் சூரியனுடன் புதன் ராசியில் அமர்ந்து ராசிநாதனின் நற்பலன்களை வழங்குவார்கள். தனஸ்தானத்தை குரு பார்வை பெறுவதனுடன் செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பது பொருளாதாரத்தில் உங்களின் வளம் சிறப்பாக அமையும். கிடைக்க வேண்டிய நேரத்தில் அனைத்து சலுகைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். குரு உச்சம் பெற்றிருப்பதால் குரு பார்வை பெறுமிடம் சிறப்பாக அமையும்.
 
உங்களின் ராசிக்கு யோகாதிபதி சனி ஆட்சி பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று தொழில் ஸ்தானாதிபதி சந்திரனுடன் இணைவு பெற்று இருப்பது உங்களின் தொழில் மிகவும் சிறப்பாக அமையும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்ய தயங்கமாட்டீர்கள். உங்களின் பழைய நண்பரின் சந்திப்பு மலரும் இணைவுகளை உறுதி செய்யும். கருத்துகளை பகிர்ந்து கொள்வதில் உங்களின் பேச்சு மிகவும் இனிமையாக இருக்கும். யாரையும் பேசி கவரும் பின்புகளை பெற்று விளங்குவீர்கள். பொதுவான விடயங்களின் கொள்கையில் உறுதியுடன் செயல்படுவீர்கள். பொருளாதார வளம் நன்றாக இருக்கும்.
 
கலைத்துறையினர் நினைத்ததை சாதித்து காட்டி நிகழ்ச்சியை திறம்பட செய்து முடிப்பீர்கள். இரவு நிகழ்ச்சிகளில் அதிக பங்கிடவேண்டி இருக்கும். கல்வியில் திறம்பட மேன்மை அடைவீர்கள். அரசியலில் அதிகம் ஈடுபாடு இல்லை என்றாலும் அதில் சிறிது ஆர்வம் கொள்வீர்கள். புதுமையை விரும்பும் உங்களின் ரசனைக்கு வரவேற்பும் இருக்கும். பெண்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். துணிவுடன் இருப்பீர்கள். எதை செய்தாலும் அதில் முழுமையான ஈடுபாடுகளுடன் செயல்பட்டு மேலும் திறமையை உருவாக்கி கொள்வீர்கள். சொந்த வீடு கட்டும் வாய்பபு சிலருக்கு அமையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
வெண்மை, ஆரஞ்சு, நீலம்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
மேற்கு, வடமேற்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வெள்ளி, சனி, செவ்வாய்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
06-11-2025 வியாழன் பகல் 02.15 முதல் 08-11-2025 சனி மாலை 04.30 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வெள்ளிக்கிழமைகளில் அம்மன் சன்னதியில் நெய் தீபமிட்டு வெள்ளை நிற பூ வைத்து நெய் அன்னம் வைத்து குங்கும அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்ள சகலமும் நினைத்தபடி வெற்றியை தரும்.