நவம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - மீனம்

நவம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - மீனம்

உண்மையும், நேர்மையும் கொண்டு செயல்படும் மீன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு அதிசாரமாக ராசியை பார்வை இடுவதும். சுக்கிரனின் பார்வை ராசிக்கு இருப்பதும் உங்களின் அன்றாட செயல்கள் பலம் பெற்று வளமாக அமையும். எதை செய்தாலும் அதற்கு பக்கபலமாக உங்களின் செயல்பாடுகள் அமையும். எதை செய்தாலும் அதற்கு பக்கபலமாக உங்களின் செயல்பாடுகள் அமையும். யாரையாவது பார்க்க செல்ல வேண்டும். நினைக்கும் போதே அவரே வந்து உங்களின் முன்பும் நிற்பது ஆச்சிரியத்தை தரும். செய்யும் தொழிலில் இனிவரும் காலம் ஏற்றம் பெறுவீர்கள்.
 
உங்களின் ராசிக்கு பாக்கியாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று அமைவதும். உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்க பெறுவீர்கள். சுகஸ்தானத்தில் செவ்வாய் பார்வை பெறுவது வாகன வசதிகளை பெறுவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டு இல்லாமல் உங்களின் பணியை நீங்களே செய்து கொள்வீர்கள். எதிரிக்கு கூட எதுவும் நடக்க கூடாது என்று நினைப்பீர்கள். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும் போது அதனை தவிர்க்க நினைப்பீர்கள். இசை கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பாக்கியாதிபதி பலம் பெறுவது புனித யாத்திரையை சென்று வருதல், தீர்த்தமாடுதல் தெய்வ வழிபாடு ஆன்மீக ஈடுபாடுகளில் செயல்படுவீர்கள். தனித்துவ செயல்பாடுகளை வரவேற்பீர்கள்.
 
சூரியன் அட்டமஸ்தானத்தில் அமர்ந்து தனஸ்தானத்தை பார்ப்பது உங்களின் அரசாங்க பணிகள் மிக சிறப்பாக நடக்கும். தொழிலிலும், தொழில் சார்ந்த பல பணிகளும் சிறப்பாக அமையும். பாதகாதிபதி எட்டில் மறைவதால் எதிலும் சாதகமான பலன்களை உண்டாகும். பல திட்டங்களை வழிவகுத்து நீங்கள் செய்யும் பல காரியங்கள் உங்களுக்கு நன்மையை பெற்று தரும். மாணவர்களுக்கு அறிவாற்றல் பெருகும். சிறந்த பணிகளை செய்து வெற்றியை பெறுவீர்கள். ஆன்மீகம் உங்களை தொடர்ந்து வாழ வைக்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
வடக்கு, மேற்கு, வடகிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வியாழன், வெள்ளி, செவ்வாய்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
17-11-2025 திங்கள் மாலை 05.50 முதல் 20-11-2025 வியாழன் அதிகாலை 05.10 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து நெய் தீபமேற்றியும் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றியும் மன உருக வேண்டிக் கொள்ள எண்ணிய எண்ணம் ஈடேறும்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554