குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - சிம்மம்

.வெற்றியின் இலக்கை நோக்கி தினம் செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!
இதுவரை உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இருந்து குரு 11-05-2025 முதல் லாபஸ்தானமாகிய மிதுனத்தில் அமர்கிறார். குரு பார்க்குமிடம் சிறப்பான நற்பலன்களை பெற்றுத் தரும்.
குரு மூன்றாமிடமான முயற்சி, கீர்த்தி ஸ்தானத்தை பார்ப்பதால் நீங்கள் எடுக்கும் சகல முயற்சிகளுக்கு நற்பலன்களை பெற்று தரும். உறுதுணையாக செயல்பட உங்களுக்கு நண்பர்கள் உதவி கிடைக்கும். எந்த செயலுக்கு ஊக்கம் கிடைக்கும் போது அது மேலும் பல வழிகளில் வெற்றியை பெற்று தரும். நீங்கள் தொழிலில் பல இடையூறுகளை சந்தித்து வந்தீர்கள். இனி தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
பஞ்சமஸ்தானத்தை குரு பார்ப்பதால் குரு அருளால் உங்களின் பூர்வீக சொத்து சம்மந்தமான சில விவகாரங்கள் தீரும். குல தெய்வ வழிபாடு மூலம் உங்கள் இலக்கு விரைவில் நிறைவேறும் பாதியில் நின்ற காரியங்கள் இனி செயல்படதுவங்கும். நினைத்த காரியம் கைகூடும்.
களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் திருமணம் நடக்காதவருக்கு திருமணம் கைகூடும். சிலருக்கு வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகள் அமையும். கூட்டுத் தொழில் செய்பவருக்கு கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய திட்டங்களுக்கு நல்ல வழி கிடைக்கும். எதிர்பார்த்த சில விடயம் விரைவில் நடக்கும். உங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற நல்ல வழி கிடைத்து அதற்கு உண்டான பணிகள் நடக்கும்.
உடல்நலனில் முன்னேற்றம் காண்பீர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று வீர்கள். பொது நலத்தில் ஆர்வம் கொண்டு செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள்.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்து விளக்கு ஏற்றி வேண்டிக் கொள்வது நல்லது. ஆஞ்சநேயரை நினைத்து காரியத்தை துவங்குவது இன்னும் சிறப்பான பலனை பெற்று தரும்.