குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - கடகம்

குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - கடகம்

.எதை செய்தாலும் முன்கூட்டியே யோசித்து செயல்படும் கடக ராசி வாசகர்களே!
 
இதுவரை உங்களின் லாபஸ்தானத்தில் இருந்த குரு பகவான் இனி விரைய குருவாக வரும் 11-05-2025 முதல் அமர்வதும் சுகஸ்தானத்தையும், சத்ரு ஸ்தானத்தையும், அட்டம ஸ்தானத்தையும் பார்வை இடுவதால் உங்களுக்கு நன்மையும் தீமையும் வெற்றியை தரும்.
 
சுகஸ்தானமான நான்காமிடத்தை குருவால் பார்க்கபடுவதால் வீடு கட்டுதல், வீடு பாராமரிப்பு பார்த்தல், வாகன வசதிகளை பெருக்கி கொள்தல் போன்ற வழிகளில் நன்மையை அடைவீர்கள். உடல் நலனின் முன்னேற்றம் உண்டாகும் ஏற்கனவே உடல் நலமின்றி இருப்பவர்களுக்க உடல்நல மேன்மை பெறுவீர்கள். தாயார் உடல் நலனின் கவனம் செலுத்துவீர்கள். பொது நலன் கருதி நீங்கள் செயல்படுவது சிறப்பான நற்பலன்களை பெற்று தரும்.
 
சத்ரு, ரண, ருண ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தேவையற்ற பொருளாதார பிரச்சனைகளை படிப்படியாக தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்று நலம் பெறுவீர்கள். கடன் தீர்த்து வைத்தல், மூலம் பல நாள் கஷ்டத்திலிருந்து விடுபடுவீர்கள். மறைமுக எதிரிகளால் பட்ட துன்பம் விடுபடும். வங்கி மூலம் கடன் பெற்று செய்தொழிலை விருத்தி செய்து கொள்வீர்கள். அட்டம சனியுடன் ராகு இணைந்து இருப்பதால் எந்த காரியமாக இருந்தாலும் அதில் சிலரின் வில்லங்கம், விவகாரம் வந்து தொல்லை கொடுத்து வந்த நிலை மாறி நன்மை பெறுவீர்கள்.
 
வரும் 08-10-2025 முதல் குரு அதிசாரமாக அமர்வது உங்களின் ராசிக்கு ஜென்ம குருவாக அமர்ந்து எடுத்த காரியத்தில் நினைத்தபடி செயல்பட்டு வெற்றியை பெறுவீர்கள். முயற்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து மேன்மை அடைவீர்கள். எடுத்த காரியத்தில் கவனம் செலுத்தி சரியாக செயல்பட்டு பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்று சேமிப்புகளை ஊக்கபடுத்துவீர்கள்.
 
பரிகாரங்கள்:
 
வியாழக்கிழமைகளில் நோன்பிருந்து நவகிரக குருவுக்கு தயிர் அன்னம் நைவேத்தியம் இட்டு மஞ்சள் நிற பூ வைத்து நெய் தீபமிட்டு வர நினைத்த காரியம் தடையின்றி சுபிட்சமாக அமையும்.