About Dr.Sivakumar Aura Science Expert

‘கடவுள்களின் தேசம்‘ என்று புகழப்படுகின்ற கேரளாவைச் சேர்ந்தவர் இவர். மரபணுத் துறையில் புலமை பெற்ற இவர், பிரபல தொழிற்சாலை ஒன்றில் உயர் பதவி வகித்தவர். இயல்பாகவே பக்தியும் ஆச்சாரமும் கொண்ட இவர், சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், கர்நாடகாவில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அன்னை மூகாம்பிகை அம்மன் கோவிலுக்குச் சென்ற சந்தர்ப்பத்தில், காஞ்சி சங்கராச்சாரியார் இவருக்கு மூகாம்பிகை விக்கிரகம் ஒன்றைக் கையளித்து அருளுபதேசம் செய்தார். அன்று முதல், சக்தி உபாசகராக மாறிவிட்ட இவர், அன்னையின் அருளால், ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய துல்லியமான பலன்களைச் சொல்லும் சக்தி பெற்றார். இந்து சமயம் மட்டுமன்றி, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களின் தலையாய குருமார்களின் உபதேசமும் பெற்ற இவர், இனம், சமயம், மொழி பேதங்கள் தாண்டி, சகலருக்கும் அவரவர் சமயம் சார்ந்த எளிய முறையிலான பரிகாரங்களைக் கூறி வருகிறார். கடந்த பதினைந்து ஆண்டு காலமாக வளைகுடா நாடுகளுக்கு தவறாமல் விஜயம் செய்வதுடன், அவ்வப்போது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்து வருகிறார். இவற்றுக்கும் மேலாக, 200 ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கத்தில் இருந்த புராண கிரந்த முறையிலான நூற்றுக்கணக்கான ஹோமங்களைச் செய்வதிலும் நிபுணத்துவம் பெற்று விளங்குகிறார்.உலகெங்கும் லட்சக்கணக்கானோர்  இவரிடம் பலன்களைக் கேட்டு பயன் அடைந்துள்ளார்கள்.