திருமண பொருத்தம்

திருமண பொருத்தம்

பொதுவாக நம் நாட்டில் திருமணம் செய்துகொள்ளப் போகின்ற ஆணின் ஜாதகத்தையும், பெண்ணின் ஜாதகத்தையும் பொருத்திப்பார்த்து பின் நம் பாரம்பரிய முறைப்படியான தசவிதப் பொருத்தங்கள் உண்டு என்று அறிந்த பின்பே கல்யாணம் நிச்சயம் செய்கிறோம்.
 
எத்தனையோ பொருத்தங்கள் இருந்தாலும் (அதாவது 20 பொருத்தங்கள் இருக்கின்றன) இந்த வேகமான உலகத்தில் இதற்கு யாருக்கும் நேரமில்லாததால் இவற்றைச் சுருக்கி எது வாழ்க்கை சுகமாகவும்சிக்கல் இல்லாமலும் இருக்க அவசியமோ அதை இங்கு நாமே தெரிந்து கொள்ள வசதியாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நூல் வெளியிடும் நோக்கம் பொருத்தம் இல்லாமல் சம்பிரதாய, சடங்குகளை மதிக்காமல் கடந்து போன காலங்களில் நடந்த திருமணங்களால்தான் கலியுகத்தின் செயல்பாடுகள், அதன் குணம் உக்கிரமாக செயல்பட காரணமாக அமைந்தது. நாம் இதை உணர்ந்து கண்டிப்பாக இந்நூலில் உள்ள பொருத்தங்கள் அமைந்தால் மட்டுமே திருமணம் என்றால் நல்ல தலைமுறையும், ஆரோக்கியம் உள்ள வாழ்வும் அமையும் என்பது உறுதி. பலவீனமான குழந்தைகளும், தீய எண்ணங்களுள்ள புத்திரர்களும் பிறக்க காரணமாக இருப்பதும் இந்த தசவிதப் பொருத்தம் இல்லாத தாம்பத்ய சேர்க்கைதான் காரணம். இதை விஞ்ஞானம் "பிளட் க்ரூப்" என்று சொல்கிறது. நாம் ரஜ்ஜு பொருத்தம் என்கிறோம்.
 
ஆண் பெண் உருவ அமைப்புகள், சாமுத்ரிகா லட்சணப்படி லக்னாதிபதி 7-க்கு உடையவனும் நட்சத்திரமும், நட்சத்திராதிபதியும் முடிவு செய்து, அதன்படி உயரம், பருமன், சக்திதிறன், மனசு ஆகியவை நிர்ணயம் செய்யப்பட்டு அதன் இயக்க வளர்ச்சியை கண்காணிக்க சந்திரனிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த சிருஷ்டி ஆண்டவனால் முடிவு செய்யப்பட்டு கிரகங்களிடம் வந்து சேர்க்கிறது. இதன்படி ஒரு ஆண் சிருஷ்டி முடிந்ததும் அதன் இணை பெண் சிருஷ்டியும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு இவர்கள் சேரும் காலமும் நிர்ணயம் செய்து குருவால் கண்காணிக்கப்படுகிறது.  
 
தக்க சமயத்தில் ஆணும், பெண்ணும் சேர்த்து வைக்கப்படுவர். இந்த சேர்க்கை ஆண்டவனால் தீர்மானிக்கப்பட்டது என்பதால் பிரிக்க முடியாது. தலைமுறைகளாகத் தொடரும் என்பது விதி. இப்படியாக கணவன் மனைவி கருத்து ஒற்றுமை, நோய் நொடி இல்லாத வாழ்க்கை, நல்ல தலைமுறை, அதனால் பெரும் யோகம் யாவும் இந்த பொருத்தத்தின் அடிபடையில்தான் நடக்கிறது.
 
நீங்கள் செய்ய வேண்டியது: இந்நூலில் உள்ள கட்டங்களில் ஆண் பெண் நட்சத்திரங்கள் சேரும் இடம் X என்றால் வேண்டாம் என்றும்,  என்றால் செய்யலாம் என்றும் பொருள். இதன்படி இங்கு உள்ள 12 பொருத்தங்களில் குறைந்தபட்சமாக கீழே கொடுக்கப்பட்ட பொருத்தங்கள் இருக்க வேண்டியது அவசியம்.
 
1. ரஜ்ஜு பொருத்தம்: இந்த பொருத்தம் இல்லை என்றால் ரத்தத்தின் தன்மை வேறுபட்டு தலை, சொட்டை, முடிகொட்டுதல், புத்தி மாறாட்டம், வேதக்கயிறு உண்டாகும். இவ்வகையில் சேரக்கூடாத நட்சத்திரங்கள்: மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம்.
 
(அ) வயிறு ரஜ்ஜு: வாயுக்கோளாறு, வயிற்று உப்புசம், உடல் இளைத்தல், ஜீரணக்கோளாறு, அல்சர் போன்ற நோய்கள் உண்டாகும். இவற்றுக்கான நட்சத்திரங்கள்: கார்த்திகை - புனர்பூசம் - உத்ரம் - விசாகம் - உத்ராடம் - பூரட்டாதி.
 
() கழுத்து ரஜ்ஜு: கழுத்துக் கழலை உணவுக்குழாய் பாதிப்பு, காது ஆகிய நோய்கள். இவற்றுக்கான நட்சத்திரங்கள்: ரோகிணி- திருவாதிரை-அஸ்தம்-சுவாதி-திருவோணம்-சதயம்.
 
() துடை ரஜ்ஜு: துடை சம்பந்தமான வியாதிகள். இவற்றுக்கான நட்சத்திரங்கள்: பரணி-பூசம்-பூரம்-அனுஷம்-பூராடம்-உத்ரட்டாதி.
 
() பாதம் ரஜ்ஜு: யானைக்கால், பாதம் மற்றும் கழுத்து பாளம் பாளமாக வெடித்தல் போன்ற நோய்கள். இவற்றுக்கான நட்சத்திரங்கள்: அஸ்வதி-ஆயில்யம்-மகம்-கேட்டை- மூலம்-ரேவதி. எனவே இந்தப் பொருத்தம் மிக முக்கியமானது.
 
2. யோனிப் பொருத்தம்: இது மிகவும் முக்கியம். கணவன் மனைவி சேர்க்கை சரியான Positions அமைந்து திகட்டாத இன்பம் அளிக்க இந்த பொருத்தம் அவசியம். இந்தப் பொருத்தம் இல்லையென்றால் தாம்பத்யம் இனிக்காது என்பதில் சந்தேகமே இல்லை.
 
3. வசியப் பொருத்தம்: கணவன் மனைவிக்கு ஒருவர் மேல் ஒருவருக்கு இனம் புரியாத ஒரு கவர்ச்சி இருக்க வேண்டும். சாதாரணமாக ஒரு பொருளையோ, ஒரு நபரையோ, அல்லது ஒரு செயலையோ தொடர்ந்து பார்க்கும் போதும், ஈடுபடும்போதும் சலிப்பு ஏற்படுவது இயற்கை. அந்த சலிப்பு வராமல் ஆயுட்காலம் முழுவதும் சேர்ந்து வாழ வசியப் பொருத்தம் அவசியம்.
 
4. நாடிப் பொருத்தம்: மனிதனின் உடல் நிலை நன்றாக இடுக்கிறதா என்று பார்க்க நாடி பிடித்து பார்ப்பது மருத்துவர்களின் செயல். கணவன் மனைவி நடத்தும் குடும்ப வாழ்க்கையில் நோய் நொடிகள் வராமல் இருக்க இந்த நாடிப் பொருத்தம் அவசியம். நாடி அடங்கி விட்டால் எப்படி உயிர் பிரிந்து விடுகிறதோ அது போல் நாடிப்பொருத்தம் இல்லாமல் போனால் வாழ்க்கை நோய்களுக்கு இரையாகிவிடும்.
 
5. கணப் பொருத்தம்: கணவன் மனைவி ஒற்றுமையாய் ஐக்கியப்பட்டு வாழ இப்பொருத்தம் அவசியம்.
 
6. தினப் பொருத்தம்: ஒவ்வொரு நாளும் கணவன் மனைவி ஒற்றுமையாய் வாழ இப்போருத்தம் அவசியம்.  
 
7. மகேந்திரப் பொருத்தம்: புத்திரமும், புத்திரர்களால் உண்டாகும் செல்வமும் கிடைக்க, செழிப்பாக வாழ்க்கை அமைய மகேந்திரப் பொருத்தம் அவசியம்.
 
8. ராசிப் பொருத்தம்: கணவனுக்காக மனைவி செய்யும் காரியங்களும், மனைவிக்காக கணவன் செய்யும் காரியங்களும் ராசியாக அடைய ராசிப் பொருத்தம்.
 
9. ராசி அதிபதி பொருத்தம்: தம்பதியர்கள் அவர்களுக்காக செய்யும் காரியங்களின் பலன் முழுமையாக கிடைக்க ராசி அதிபதி பொருத்தம் அவசியம்.
 
10. ஸ்திரீ தீர்க்கம்: சிறந்த இல்லறம் அமைய ஸ்த்ரீ தீர்க்கம் அவசியம்.
 
11. வேதை பொருத்தம்: கணவன் மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் இந்த வேதையை அறிய வேண்டும். இல்லை என்றால் ஒரே கருத்து இரண்ண்டு பேருக்கும் என்றாலும் அதை இவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நிரந்தரமான கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டே இருக்கும். இனி சந்தோஷமாயிருந்த தம்பதியினருக்குள் திடீரென்று பிரச்னைகள் உருவாகக் காரணம் என்னவென்றும், அது எவ்வளவு நாள் நீடிக்கும் என்றும் பார்க்கலாம். எலியும் பூனையுமாக இருந்த தம்பதியினர் இப்பொழுது மனமோத்தவர்களாக இருப்பது எப்படி?  
 
இதற்கு காரணம் தசா பொருத்தம் வேதை ஆவதுதான் காரணம். மனைவியின் நடப்பு திசை கணவனின் நடப்பு திசைக்கு சத்ரு திசையாக இருந்தாலும், கணவனின் நடப்பு திசை மனைவியின் திசைக்கு சத்ருவாக இருந்தாலும் இந்த தற்காலிக பிரிவு உண்டாகும். இதை தவிர்க்க முடியாது. ஆனால் தெரிந்து இந்த வேறுபாடு பெரிதாகாமல் சிறிய நிலையிலேயே கட்டுப்படுத்தி அனுசரித்து செல்லலாம்.

இனி இங்கு கொடுத்துள்ள கட்டங்களில் ஆண் பெண் என்று இரண்டு பிரிவுகள். அதில் இருவரின் 27 நட்சத்திரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது-மணப் பெண்ணின் நட்சத்திரத்தை தொட்டு அதே கட்டத்தில் மணமகனின் நட்சத்திரம் வரை நேர் கீழாக வந்து இரண்டு சந்திக்கும் இடத்தில் உள்ள குறியை கவனிக்க வேண்டும். இதில் முக்கியமாக ரஜ்ஜுவசியம்நாடியோனிகணம்திசா பொருத்தங்கள் மிகவும் முக்கியம்.  இதன் பிறகு திருமண நாள் நிச்சயிக்கப்படும் பொழுது கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 

நல்ல மாதங்கள்: சித்திரை, வைகாசி, ஆனி, தை, பங்குனி.

நல்ல திதிகள்: துவிதை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி.

நல்ல கிழமைகள்: திங்கள் - புதன் - வியாழன் - வெள்ளி.

நல்ல நட்சத்திரங்கள்: அசுவதி, ரோஹினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், மூலம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்ரட்டாதி, ரேவதி.

நல்ல லக்னங்கள்: ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம். 

மேலும் மனமொத்த தம்பதியராய் வாழ சில குறிப்புகள்: 

1. 7-க்கு உடையவனும்சுக்ரனும்குருவும்கேந்திரதிரிகோணங்களில் பாவக் கிரகங்களுடன் சேராமல் தனித்து இருந்து லக்னாதிபதி ஏதாவது ஒரு ஸ்தானத்தில் பலமாக இருந்தால் சுகமான வாழ்வு.

2. சுபக்கிரகங்களாகிய குறுபுதன்சுக்ரன். சந்திரன் இவர்கள் 2-ம் இடத்தில் இருந்து இருந்து பாவக் கிரகங்கள் பார்வை இல்லாமல் மற்றும் எங்கு இருந்தாலும் சுகமான வாழ்வு. 

3. லக்னாதிபதியும்குருவும் லக்னத்தில் இருந்தால் நல்வாழ்வு. 

4. 2-ம் வீட்டிற்கு உடையவனும், 7-ம் வீட்டிற்கு உடையவனும்குருவுடனும்புதனுடனும் சேர்ந்து 2-ம் இடத்திலேயே இருந்தால் நீண்டகாலம் சுகமாக வாழ்வார்கள். 

5. மணமகன் ஜாதகத்தில் 1,2,7 -க்கு உடையவர்கள் குருவர்க்கம் ஏறினால் நல்ல மனைவியாக அமையும். மேற்கூறிய குறிப்புகள் அனுபவத்தில் உண்மையாக உள்ளன. 

இங்கே கூறப்பட்டுள்ள பொருத்தங்களில் No Compromise என்று Strict ஆக எல்லா பொருத்தங்களும் சேர்ந்துஏழாமிடம் இருவர் ஜாதகத்திலும் நல்ல நிலையில் இருந்தால் அமோகமான திருமண வாழ்க்கை அமையும். 

எண் கணித பொருத்தம்: எண் கணிதப்படி திருமணம் செய்ய வேண்டிய பொருத்தமான எண்கள்பிறந்த எண்ணின் அடிப்படையிலும்எதிர்கால எண்ணின் நட்பு முறை அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு எண்கள் பின் வருமாறு:
 
ஆண், பெண் பிறந்த எண்
நட்பு எண்
1
2,9,3
2
5,1
9
1,2,3
5
6,1
3
1,9,2
6
5,8
8
5,6
7
6
4
9,3,5

திருமண நாள் இந்த நட்பு எண்ணின் வரிசையிலேயே அமைந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். எனவே, இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் மிக மிக முக்கியமான ரஜ்ஜு, யோனி, வசியம், நாடி, கணம் ஆகிய பொருத்தங்களுடன் மேலும் ஐந்து பொருத்தமும் ஆக 10 பொருத்தம் அவசியம் இருக்க வேண்டும்.


ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு மரமாக கருதப்படுகிறது. மணமக்களில் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பால் மரம் அமைய வேண்டும். அவ்வாறு பால் மரம் அமைந்தால் புத்திர பாக்கியம் உறுதி. இருவருக்கும் பால் மரம் உள்ள நட்சத்திரங்களாக இருந்தால் மிகவும் நன்று.