கலியுக வைகுண்டமாம் திருப்பதியில் பிரம்மோற்சவ விழா!

இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்புண்ணியத் திருத்தலம். திருப்பதி மலையில் அமைந்துள்ள ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளின் திவ்ய தரிசனத்திற்காக பக்தர்கள் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கில் வருடம் முழுவதும் வந்து கொண்டே இருக்கின்றார்கள். ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் திருமலை உள்ளது. எனவேதான், திருமலை, ஏழுமலை என்று தமிழிலும் ஏழுகொண்டலு என்று தெலுங்கிலும் அழைக்கப்படுகின்றது. திருப்பது என்ற சொல் திரு எனவும் பதி எனவும் பிரிக்கப்பட்டுகின்றது. வடமொழிச் சொல்லான பதி என்பதற்கு கணவன் அல்லது தலைவன் எனப் பொருள்படுகின்றதுஇ தமிழ் சொல்லான திரு என்பதற்கு புண்ணியம், தெய்வத்தன்மை, மேன்மை மிக்க என்றெல்லாம் அர்த்தமாகின்றது. திருப்படி என்பதே பிற்காலத்தில் மருவி திருப்பதி ஆகியதாகவும் சொல்லப்படுகின்றது.
இந்தியாவில் உள்ள மிக முக்கிய வைணவத் திருத்தலங்களில் திருப்பதியும் ஒன்றாகும். இத்திருத்தலம் பெருமாளுக்கான நூற்றி எட்டு திவ்யதேசங்களுள், திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் வைத்துப் போற்றப்படுகின்றது.
திருப்பதியில் உள்ள ஏழு சிகரங்களும் ஆதிசேஷனின் ஏழு தலைகளைக் குறிப்பதால் இந்த மலைக்கு “கோசாலம்” என்ற பெயரும் உள்ளது சேஷாத்திரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்திரி, வரிசபத்ரி நாராயணாத்ரி, வேங்கடாத்ரி என்பவையே அந்த ஏழு மலைகள். உலகின் பழைமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பவை இந்த திருமலை மலைகள் தான்.
ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளின் ஆலயம் எந்த ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது என்பது உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும் பழைமையும் புராணப் பெருமைகளும் கொண்ட இந்த ஆலயம் பல்லவ, சோழ விஜயநகரப் பேரசுகளால் பல ஆண்டுகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
விஜயநகரப் பேரரசின் மிக முக்கிய அரசனான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர். இந்த ஆலயத்திற்காக தங்கத்தையும், மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாகக் கொடுத்துள்ளார். இந்தக் கோவிலுக்கு அருகாமையில் இதர கோயில்களையும் நிறையும் கட்டியுள்ளார். திருப்பதியிலிரந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் தென்மேற்குத் திசையில் அமைந்திருக்கும் “சந்திர கிரி” என்னும் கிராமம் விஜயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது. வைணவம் தளைத்திருந்த கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வைணவப் புனிதத் திருத்தலமாகிய திருப்பதி, “கலியுக வைகுண்டம்” என ஆழ்வார்களால் போற்றப்பட்டது.
புரட்டாசித் திருவோணம், திருவேங்கடநாதனின் பிறந்த நாளாகத் தொன்று தொட்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது. திருவோண தினத்திற்கு முன்பாக வருகின்ற ஒன்பது நாட்கள் நடைபெறும் மிகப் பெரிய திருவிழாவில் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் பலவிதமான வாகனங்களில் விசேட அலங்காரங்களுடன் உற்சவ மூர்த்தி ஏழு மலையான அமர்ந்து திருவீதி உல வருகின்றார்.
ஸ்ரீ வேங்கடேஸ்வரருக்கு நடத்தப்படுகின்ற இந்தத் திருவிழாவை, படைப்புக் கடவுளான பிரம்ம தேவனே முன்னின்று நடத்தி வந்ததால், இந்த உற்சவம் “பிரம்மோற்சவம்” என அழைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் வருடம் ஒரு முறை பிரம்மோற்சவம் நடைபெற்று வந்ததாகவும், அதன் பின்பாக புரடை்டாசி மாதத்தில் ஒரு முறையும் மார்கழி மாதத்தில் ஒரு முறையும் இரண்டு தடவைகள் நடத்தப்பட்டதாகவும் ஆலயம் சம்பந்த்பபட்ட பழைமையான கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ள என திருமலையின் மூன்றாம் சுற்றுச் சுவரில் காணப்படும் ஒரு கல்வெட்டில் 1551ம் ஆண்டில் ஒரே ஆண்டில் பரினொரு முறை பிரம்மோற்சவம் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலையில் கொடியேற்றத்துடன் துவங்கப் படும் பிரம்மோற்சவம், ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இதில், ஐந்தாம் நாள் திருவிழாவான மோகின அவதார உற்சவம் மிகுந்த பிரசித்தி பெற்றது.
அன்றிரவு உற்சவரான எம்பெருமான், கருடாழ்வார் மீது திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள்பாலிப்பார்.
திருவீதி உலாவின் போது கருட வாகனத்திற்கு வெண்பட்டுக் குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் இன்றளவும் இருந்துவ ருகின்றது. ஆறு பெரிய குடைகளும், நான்கு சிறிய குடைகளும் சமர்ப்பிக்கப்படுகின்றது. இக்குடைகள் யாவும் சென்னையிலிருந்தே கொண்டு செல்லப்படுகின்றன.
திருவிழாவின்போது கருட சேவை தினத்தன்று. மூலவருக்கு அணிவிப்பதற்காக விலை உயர்ந்த பட்டாடைகள் தயாரித்து ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்து தினசரி பூஜை செய்வார்கள் பிரம்மோற்சவ விழாவின்போது காலை-மாலை இரு வேளைகளிலும், சின்ன சேஷ வாகனம், பெரிய சேஷ வாகனம், தங்கத் திருவாசி, ஹம்ச வாகனம், முத்துப் பந்தல், கல்ப விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனங்கள், பல்லக்கு, கருட சேவை, அனுமந்த வாகனம், சூரிய சந்திர பிரபை வாகனங்கள், திருத்தேர் கதிரை வாகனம் இப்படிப் பல்வேறு வாகனங்களில் வெங்கடேஸ்வரப் பெருமாள் திரு வீதி உலா வருவார். குடை சாமரம், மங்கள வாத்தியங்கள் முழங்க மறைப்பாராயணங்களுடன் பக்தர்களின் புடைசூழ பிரம்மோற்சவம் நடைபெறும்.
இந்தத் திருவிழா காண்போரை பக்திக் கடலில் மூழ்கச் செய்யும். பிரம்மோற்சவத்தில் ஒரு முக்கிய நிகழ்வான “ஊஞ்சல் சேவை”யைக் காண்போருக்கு இம்மையிலும் மறுமையிலும் கோடானுகோடி இன்பம் பெருகும். தேர்த் திருவிழாவின் போது எம் பெருமாள் தங்கத் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காடச்ியளிப்பார். பிரம்மோற்சவத்தின் கடை நாளான திருவோணத்தன்று சுவாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வாருக்கு நீரோட்டம் நடைபெறும்.
கலியுக வைகுண்டமாய் போற்றப்படும் திருமலைத் திருவிழாவுக்குச் செல்லும் பக்தர்கள் ஏழு மலையானை பக்திப் பெருக்குடன் தரிசித்து விட்டு, திருமலையில் உள் ளதீர்த்தங்களையும், அவர் மேலுமங்காபுரத்தில் உள்ள பத்மாவதித் தாயாரையும் வணங்கி வழிபட்டால் வாழ்வில் எல்லா நலங்களையும் பெறலாம். திருப்பதி சென்று வந்தால் வாழக்கையில் நல்ல திருப்பங்கள் நிகழ்ந்திருடும் என்பது நம்பிக்கை!
- ஒத்தகடை ராமன்
Featured Video
மாத பலன்கள்
Newsletter Sign Up
Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!